NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விடைத்தாள் மதிப்பீடு – ஆசிரியர் சங்கம் முன்வைத்துள்ள முறைப்பாடு!

உயர்தர விடைத்தாள்களை பகுதி வாரியாக சரிபார்க்கும் நடவடிக்கையானது பலனளிக்காது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழ் மொழி மூலமான வினாத்தாள்கள் மாத்திரம் திருத்தும் பணிகள் தொடங்கப்பட்டாலும், முழுமையான விடயங்களுக்கும் ஆரோக்கியமான செயற்பாடாக அமையாது என அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கும் கல்வி அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று கல்வி அமைச்சில் இடம்பெற்றது.

இதன்போது, உயர்தர விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ரசிக ஹந்தபாங்கொட ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles