NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விபத்தில் 8 மாதக்குழந்தை பலி!

மாத்தறையில் முச்சக்கரவண்டியில் பயணித்த 8 வயது குழந்தையொன்று விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது.

மாத்தறை, தங்காலை பிரதான வீதியின் உடதெனிய பகுதியில் நேற்று (04) காலை டிப்பர் வாகனமும், முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியின் பின் இருக்கையில் பயணித்த தாய் மற்றும் அவரது மகன் ஆகியோர் படுகாயமடைந்து தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்பின்னர் துரதிர்ஷ்டவசமாக 8 வயதுடைய குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles