NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவது தொடர்பான அறிவிப்பு!

வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டத்திற்கான கைரேகைகள் பெற்றுக்கொள்ளும் பணி நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாடளாவிய ரீதியில் உள்ள 51 பிரதேச செயலகங்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும், தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டு, விண்ணப்பதாரரின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலiயில், வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெறுவதற்கு பணம் செலுத்துவதற்கு முன்னர் விண்ணப்பப் படிவம் சரிபார்க்கப்படும் எனவும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதேச செயலகங்கள் ஊடாக நாளாந்தம் சுமார் 765 பேரின் கைரேகைகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles