NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயிருந்த சிறுவனின் சடலம் மீட்பு!

வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயிருந்த சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

அங்குருவத்தோட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நேபட நியூச்செட்டல் தோட்டத்தில் வசித்து வந்த  17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே வெள்ளத்தில் சிக்கியுள்ளார்.

பின்னர் உடுவர கிராமசேவர் பிரிவில் மாணவனின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

சடலம், ஹொரணை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், 

அங்குருவத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles