NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெள்ளத்தில் மூழ்கிய புகையிரத பாதைகள் – சேவைகள் பாதிப்பு!

கடும் மழை காரணமாக கொழும்பு தொடக்கம் புத்தளம் வரையான புகையிரத பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகப் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று (21) கொழும்பு தொடக்கம் புத்தளம் வரையான புகையிரத மார்க்கத்தில் பயணிக்கும் புகையிரத சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து புத்தளம் வரையான புகையிரத சேவையில் ஒரு நாளைக்கு நான்கு புகையிரதங்கள் செயற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles