அணுக்கழிவு நீரில் வளர்ந்த மீன்களை உட்கொண்டு ஜப்பான் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida) பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து வெளியேறிய நீரில் வளர்ந்த மீன்கள் ஆபத்தானவை இல்லை என்பதை நாட்டு மக்களுக்கு உணர்த்தவே அவர் இவ்வாறு செய்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து கதிர்வீச்சு கலந்த அணுக்கழிவு நீர் பசிபிக் பெருங்கடலில் திறந்துவிடப்பட்டது.
தொன் கணக்கில் அணுக்கழிவு நீர் கடலில் வெளியேற்றப்பட்டதற்கு சீனா உள்ளிட்ட அண்டை நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.