NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆசிரியருக்கு உயிர் அச்சுறுத்தல் !

முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி பாடசாலை ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம். தீர்வை பெற ஜனாதிபதியிடம் கோரிக்கை.

முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி பாடசாலை ஆசிரியர்கள் கறுப்புபட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றையதினம் (08) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு முள்ளியவளை  வித்தியானந்தா கல்லூரி பாடசாலை ஆசிரியர் ஒருவரின்  மோட்டார் சைக்கிளும், தங்கியிருந்த வீடும்  கடந்த  சில தினங்களுக்கு முன்னர் எரிக்கப்பட்டிருந்தது. ஆனால்  முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை  முன்னெடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை.

எனவே குறித்த விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளியை கைது செய்யுமாறும், ஆசிரியருக்கு நியாயமான தீர்வினை வழங்கவேண்டும், தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை  ஜனாதிபதியிடம் முன்வைத்து வித்தியானந்தா கல்லூரி பாடசாலை ஆசிரியர்கள் இன்றையதினம் (08.10.2024)  காலை 8.00 தொடக்கம் 8.25 வரை  பாடசாலை வாயிலில் கையில்  கறுப்புபட்டி அணிந்து கல்விக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில்  கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles