ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தலைநகர் காபூலில் இருந்து 535 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உண்டானது. இது ரிக்டர் அளவில் 4.1 ரிச்டராக பதிவாகியுள்ளது.
73 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தமையால், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக தகவல் வெளிவரவில்லை.
ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 2,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.