NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தியாவில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள்!

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா பகுதியில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி முதலாவது நிலநடுக்கம் இன்று காலை 6.45 மணியளவில் 4.9 அளவில் பதிவாகியது பின்னர் 4.8 என பதிவாகியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நிலநடுக்கத்தில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் 4.8 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதம் இதுவரை மதிப்பிடப்படவில்லை. இந்த நிலையில் அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Share:

Related Articles