NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இனி கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதில் சிரமம் இல்லை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நாடளாவிய ரீதியில் 50 பிராந்திய செயலக அலுவலகங்களில் கடவுச்சீட்டு வழங்குவது தொடர்பான அடிப்படை வசதிகள் செய்துதரப்படவுள்ளதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அல்லாஸ் தெரிவித்துள்ளார்.

இன்று (22) காலை ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், இந்த ஆண்டு இ-பாஸ்போர்ட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்த அமைச்சர், தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியில் 5 இடங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

Share:

Related Articles