இலங்கையில் நாள்தோறும் 9 பேர் அளவில் தற்கொலை செய்துகொள்வதாக பேராதனை பல்கலைக்கழக ஆய்வொன்றில் மூலம் தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில், மூன்று வருட காலத்தில் 9,700பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
தற்கொலை செய்துள்ளவர்களில்,
83 வீதமானவர்கள் ஆண்கள்
35 வீதமானவர்கள் வேலையில்லாதவர்கள்
கடந்த வருடத்தில் மாத்திரம் 3,406 பேர் தற்கொலை
நாளொன்றுக்கு 9 பேர் தற்கொலை
இவ்வாறு தற்கொலை செய்து கொள்பவர்களில் 40 விகிதமானவர்கள் கல்வி கற்பவர்கள் எனவும் அவர்களுள் 22 பேர் பட்டப்படிப்பை தொடர்பவர்கள் எனவும் குறித்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், நாட்டில் பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொள்வோர் தொடர்பாக செய்திகள் அண்மைய நாட்களில் அதிகளவில் பதிவாகியுள்ளன.
தனிநபர்கள் தற்கொலை செய்து கொள்வதுடன் சில சந்தர்ப்பங்களில் குடும்பமாகவும் தற்கொலை செய்து கொள்ளும் சந்தர்ப்பங்களும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
FIND A HELPLINE
1926 – National Mental Health Helpline