NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காதலனால் ஏமாற்றப்பட்ட நிலையில் தற்கொலை செய்துகொண்ட யுவதி!

மட்டக்களப்பில் இளம் யுவதியொருவர் காதலனால் ஏமாற்றப்பட்ட நிலையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணரான லக்சிக்கா (24) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காதலனான பொலிஸ் உத்தியோகத்தரால் ஏமாற்றப்பட்ட நிலையில் சமூக வலைத்தளங்களில் காதலனின் புகைப்படங்களைப் பகிர்ந்து தான் ஏமாற்றப்பட்டுள்ளதாகக் கூறி, பதிவுகள் வெளியிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த காதலன் தன்னை ஏமாற்றியதாகப் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இந்த முயற்சி கைகூடாததால் குறித்த யுவதி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Share:

Related Articles