கொழும்பு – கிரிபத்கொட பகுதியில் இன்று காலை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பொலிஸாரின் உத்தரவுகளைப் பின்பற்றாமல் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.