NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குடும்ப வருமானத்தை அதிகரிப்பதற்கான மூலோபாய வேலைத்திட்டத்தின் கீழ் பெண்கள் பலப்படுத்தப்படுவார்கள் – திலித் ஜயவீர

நாட்டைக் கட்டியெழுப்புவதில் பெண்களும் மற்றும் தாய்மையும் பலமான சக்திகள் என சர்வஜன ஜனாதிபதி வேட்பாளர், தொழில்முனைவோர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் மாவட்ட மகளிர் தொழில் முனைவோர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நேற்று அநுராதபுரம் இளைஞர் நிலையத்தில் திலித் ஜயவீர தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட திலித் ஜயவீர, பெண்களை ஊக்குவிக்காமல் சமூக மாற்றத்தை உருவாக்க முடியாது என்றார்.

பெண்கள் இன்று பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் கிராமப்புற பெண்களின் மேம்பாட்டிற்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

அத்துடன், வருமான ஏற்றத்தாழ்வுகளை களைந்து குடும்ப வருமானத்தை அதிகரிப்பதற்கான மூலோபாய வேலைத்திட்டத்தின் கீழ் பெண்கள் பலப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Share:

Related Articles