கொத்மலை கெரன்டிஎல்ல பஸ் விபத்தில் பலத்த காயமடைந்த 14 பேர் நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் அனுமதிப்பு.
இன்று (11) அதிகாலை நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரன்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்த 14 பேர் மேலதிக சிகிச்சையைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது இதில் இரண்டு சிறுவர்கள் அடங்குவதாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் மகேந்திர சேனவீரட்ட தெரிவித்தார் .