NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சமூக ஊடகங்களை கையாள நான்கு பேர் கொண்ட உயர்மட்டக் குழு நியமிப்பு..! ஜனாதிபதி நடவடிக்கை

சமூக ஊடகங்களைக் கையாள்வதற்காக நான்கு பேர் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தக் குழு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து விடயங்களையும் கவனிக்கும் உச்ச அமைப்பாக செயற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

குறித்த குழுவில் முன்னதாக பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்சவும் இந்தக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.இருப்பினும், அவர் குழுவில் பணியாற்ற மறுத்துவிட்டார் என்றும் தெரியவந்துள்ளது.

Share:

Related Articles