NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிறுநீரக நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

இலங்கையின் சனத்தொகையில் 10 சதவீதமானோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கத்தின் பிரதம வைத்தியர் சஞ்சய ஹெய்யன்துடுவ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு நீரிழிவு நோயே பிரதான காரணியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நமது நாட்டில் சுமார் 10 சத வீதமானோர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உண்மையில் பல்வேறு காரணிகள் இந்தப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இந்த நோய் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் குறிப்பாக நம் நாட்டில் சிறுநீரகத்தைப் பாதிக்கும் முக்கிய காரணியாக சர்க்கரை நோய் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Share:

Related Articles