NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சீனாவில் யாகி சூறாவளி..!

சீனாவின் தெற்கு பகுதிகளில் ‘யாகி’ (Yagi) சூறாவளி வலுப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் விமானச் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

‘யாகி’ சூறாவளி நேற்று (4) இரவு வலுப்பெற்றது.

இந்நிலையில் சீனாவின் தெற்கு கரையோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், குறித்த சூறாவளி இன்று மதியம் முதல் நாளை (6) வரை தெற்கு கரையோரப் பகுதியை நோக்கிச் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles