NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

செங்கலடியில் வீடு ஒன்றின் காணியில் இருந்த மோட்டர் குண்டு ஒன்று மீட்பு..!

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றின் காணியில் நிலத்தில் புதையுண்டிருந்த நிலையில் மோட்டார் குண்டு ஒன்றை நேற்று புதன்கிழமை (12) மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள முதலியார் நீதிமன்ற வீதியிலுள்ள வெளிநாட்டில் வசித்து வரும் ஒருவரின் காணி ஒன்றினை பராமரித்துவரும் ஒருவர் சம்பவதினமான  நேற்று துப்பரவு செய்யும் போது நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த மோட்டார் கண்டு ஒன்றை கண்டு பொலிசாருக்கு அறிவித்தார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் குண்டை முpட்டு செயலழிக்க வைப்பதற்காக நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பாக ஏறாவூர் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles