சீனாவின் சினோபெக் நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கையில் எரிபொருள் விற்பனையை ஆரம்பிக்கவுள்ளது.
இதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் 20 ஆம் திகதி சினோபெக் நிறுவனம் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது சந்தையில் விற்கப்படும் அதிகபட்ச விலையை விடக் குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்ய நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஞசு முறைமையை இடைநிறுத்துவது குறித்து அடுத்த மாதம் பரிசீலிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அவ்வாறு ஞசு முறைமைய இடைநிறுத்துவில்லை என்றால் வாரத்திற்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.