NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டிசம்பர் மாதத்திற்குள் நாட்டில் தேர்தல் நடைபெறும் – முன்னாள்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

நாட்டில் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல்
நடத்தப்படும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
தெரிவித்துள்ளார்

நாரஹேன்பிட்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்
போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து வெளியேறியவர்கள்
சரியான நேரத்தில் எங்களுடன் இணைவார்கள்.

இதேவேளை, தேர்தல் ஒத்திவைக்கப்படுகின்றதாகக் கூறுகின்றனர்.
ஆனால் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல்
நடத்தப்படும் என எதிர்பார்க்கின்றோம் என்னை பொறுத்தவரை
தேர்தல் ஒன்று நடக்கும் எனறே நினைக்கின்றேன்.

ஜனாதிபதித் தேர்தலோ அல்லது மாகாண சபைத் தேர்தலோ எது
நடந்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம் எனவும் முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles