NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டெங்கு நோய் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!

டெங்கு நுளம்பு பெருகுவதைத் தடுக்கும் வகையில் சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு சுகாதார தரப்பினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 37 ஆயிரத்து 233 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதன்படி, மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 15,490 ஆகும்.

மேலும், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 17 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Share:

Related Articles