NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து..!

கொழும்பு – இரத்தினபுரி வீதியில் திவுரும்பிட்டிய, கட்டஹட்ட பகுதியில் இன்று (22) பிற்பகல் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து இரத்தினபுரி நோக்கியும், இரத்தினபுரியிலிருந்து கொழும்பு நோக்கியும் பயணித்த இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் பயணிகள் குழுவொன்று காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், இரத்தினபுரியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், கொழும்பிலிருந்து இரத்தினபுரி நோக்கிச் சென்ற பேருந்தின் நடத்துநரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles