NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அடக்குமுறையை கண்டித்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்..!

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அடக்குமுறையை கண்டித்து பா.ம.க. சார்பில் எதிர்வரும் 8 ஆம் திகதி இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

வங்க கடலில் மீன்பிடிக்க செல்லக்கூடிய தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி வருவதாலும் அவர்களுடைய உடைமைகளை சேதப்படுத்துவது மற்றும் கைது செய்து சித்ரவதை செய்வது போன்ற அத்துமீறலில் ஈடுபட்டு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மீன்பிடிக்கும் உரிமையை மதிக்க வேண்டும் எனவும் ஆனால் தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களை இலங்கை கடற்பட்டையினர் மதிக்காமல் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாகவும் பா.ம.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையிலும் பா.ம.க. சார்பில் மிகப்பெரிய முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இந்த போராட்டத்தில் பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் தமிழக மீனவ அமைப்புகளுக்கும் இலங்கை தூதரக முற்றுகை போராட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles