NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு!

தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கைக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கiயில் சில தொகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டும் சில தொகுதிகள தனியாக நிர்ணயிப்பதற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாலும் மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் போன்ற பல காரணங்களினாலும் இவ்வாறு அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை தொகுதி முறைமைக்கு மாறாக பழைய தேர்தல் முறைமையின் அடிப்படையில் நடத்துவதற்கு பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர குறிபிட்டுள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் நூற்றுக்கு 25 வீதத்தை இளைஞர் பிரதிநிதிகளுக்கு வழங்குவதற்கான யோசனையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து விரைவில் அனுமதியைப் பெற எதிர்பார்க்கப்பதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles