நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 5 மாவட்டங்களில் 364 குடும்பங்களைச் சேர்ந்த 1,493 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு, குறித்த மாவட்டங்களின் 330 வீடுகள் பகுதியளவில் பாதிப்படைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, யான் ஓயாவின் நீர்மட்டம், அதிகரித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.