நாளை (14) கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்து கைதிகளின் உறவினர்கள் கைதிகளை சந்திக்க சிறைச்சாலைகள் திணைக்களம் விசேட ஏற்பாடுகளை செய்துள்ளது.
பார்வையாளர்கள் தங்கள் வருகையின் போது ஒரு கைதிக்கு போதுமான உணவை மட்டுமே கொண்டு வர வேண்டும் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
சுகாதார வழிகாட்டுதல்களின்படியும் சிறை விதிகளின்படியும் வருகைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.