NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாளை விசேட போக்குவரத்து திட்டம்..!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் நாளையுடன் (18) நிறைவடையவுள்ளன.

அதன்படி, வேட்பாளர்கள் பங்கேற்கும் இறுதிக் கூட்டங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், பிரசாரக் கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கிராண்ட்பாஸ், மருதானை, நுகேகொட, பிலியந்தலை மற்றும் கொட்டாவ ஆகிய பகுதிகளில் நாளை இறுதி பிரசாரக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.

இதனால் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Share:

Related Articles