அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை கடந்த வாரம் அறிவித்திருந்த போதும் நெல் களஞ்சியசாலைகள் இதுவரை திறக்கப்படவில்லை என விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நெல்லுக்கான உத்தரவாத விலையாக, நாட்டு நெல் கிலோ ரூபா 120க்கும், சம்பா நெல் கிலோ ரூபா 125க்கும், கீரி சம்பா கிலோ ரூபா 132க்கும் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அரசாங்கம் நிர்ணயித்த உத்தரவாத விலையில் நெல்லை கொள்வனவு செய்வதற்காக கடந்த வியாழக்கிழமை முதல் களஞ்சியசாலைகள் திறக்கப்படும் என நெல் சந்தைப்படுத்தல் சபை அறிவித்திருந்தது.
எனினும், பல மாவட்டங்களில் நெல் களஞ்சியசாலைகள் சுத்தம் செய்யப்பட்ட போதும், நிதி பற்றாக்குறையின் காரணமாக இதுவரை நெல் கொள்வனவு இடம்பெறவில்லை என விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.