NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பதுளையில் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்து..! 

பதுளை தென்னேபங்குவ பிரதான வீதியில் வெந்தேசி வத்தை பகுதியில் லொறி ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்குள்ளான லொறியில் பயணித்த மூவரும் கந்தகெட்டிய 21 ம் கட்டையை சேர்ந்த நபர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லொறியின் வேகத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமையே விபத்துக்கான காரணம் என பதுளை தலைமையக பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் தெரிவித்தனர்.

காயமடைந்த மூவரும் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மேலதிக விசாரணைகளை பதுளை தலைமையக போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles