NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிலியந்தலை பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டம்

பிலியந்தலை – மஹரகம பிரதான வீதியை வெள்ள அபாயத்தினால் பாதிக்கப்படாத வகையில் அபிவிருத்தி செய்யுமாறு கோரி,அப்பகுதி மக்கள் இன்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

சிறிய மழை பெய்தாலும், பிலியந்தலை மற்றும் மஹரகம மாநகர சபைகளின் எல்லைகள் பிரியும் இடத்தில் வீதி முற்றாக நீரில் மூழ்கி போக்குவரத்து தடைப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த விடயம் தொடர்பில் அதிகாரிகளுக்கு பல தடவைகள் தெரிவித்தும் தீர்வு கிடைக்காததால், அரவலவெல சந்தியைக் கடந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், இன்று (09) அப்பகுதி மக்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால், குறித்த வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Share:

Related Articles