NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புகையிரதத்துடன் மோதுண்டதில் மூவர் உயிரிழப்பு!

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை கட்டுகுருந்த புகையிரத நிலைய அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 3 வயது பிள்ளை காயமடைந்த நிலையில், களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி பிள்ளை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மூவரும் களுத்துறை தெற்கு ரஜவத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:

Related Articles