கட்டார் அரசிற்கு சொந்தமான ‘கட்டார் எனர்ஜி’ நிறுவனத்திடம் இருந்து இரண்டு பெட்ரோலியப் பொருட்களை கொல்வனவு செய்வதற்கு இலங்கை அரசாங்கம் அவசரமாக நடவடிக்கைஎடுத்து வருவதாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஏ. ராஜகருணா குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் எரிசக்தி சார் நெருக்கடிகளை தடுக்கும் விதத்திலேயே இத்தீர்த்மானம் எடுக்க பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். குறைந்த விலையில் பெட்ரோலிய பொருட்களை ‘கட்டார் எனர்ஜி’ நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொள்வதற்காக இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டுள்ளன.
ஒரு அரசுக்கு சொந்தமான நிறுவனமாக ‘கட்டார் எனர்ஜி’ நிறுவனம் காணப்படுவதனால் அத்தகைய ஒப்பந்தத்தின் கீழ் எரிசக்தி கொள்முதல் செய்யவது சாத்தியமாகும் என ராஜகருணா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன்(UAE) இது போன்ற திட்டங்கள் குறித்து கேட்கும் போது , அந்நாட்டில் தனியார் நிறுவனங்கள் மட்டுமே பெட்ரோலிய விற்பனையில் ஈடுபடுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஏ. ராஜகருணா கூறியிருந்தார்.