NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மருந்துகளின் விலையைக் குறைக்க புதிய விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறை!

மருந்துகளின் விலையைக் குறைக்க புதிய விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறையை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி, புதிய முறையின் கீழ் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்தை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச விலை வரம்புகள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி தெரிவித்துள்ளார்.

அதன்படி, புதிய விதிமுறைகள் விதிக்கப்படுவதால், மருந்துகளின் விலைகள் துறைமுகத்திலேயே நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நாட்டுக்கு கொண்டுவரப்படும் ஒவ்வொரு மருந்துப் பொருளுக்கும் விலை கட்டுப்பாடு மேற்கொள்ளப்படுவதாக பிரதி அமைச்சர் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, குறித்த விடயங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என்பதை ஆராய்வதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் விலைக் கட்டுப்பாட்டுக் குழுவிற்கு அதிகாரம் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles