சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் மாதம்பே – இரட்டைக்குளம் பகுதியில் பஸ் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 15ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.