NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மாத்தறை பகுதியில் விபத்து- 12 பேர் காயம்.!!

மாத்தறை-அக்குரஸ்ஸ பிரதான வீதியில் இன்று (08) காலை பயணித்த வான் ஒன்று, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பலட்டுவ நுழைவாயிலுக்கு அருகில் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் லொரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மாத்தறை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வானில் இருந்த பயணிகள் மாத்தறை, முலட்டியன பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

1990 சுவ செரிய ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்தி காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உள்ளூர்வாசிகளும் பொலிஸாரும் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles