கம்பஹா – மினுவாங்கொடையில் மோட்டார் சைக்களில் வந்த இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.