NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மின்சாரம் தாக்கி மாணவன் ஒருவன் உயிரிழப்பு..!

கலேன்பிந்துனுவெவ தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் உல்பத்கம பகுதியை சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

வீட்டின் பின்புறம் உள்ள தண்ணீர் குழாயில் இருந்து குளித்துக் கொண்டிருந்த போது அருகில் இருந்த தண்ணீர் மோட்டாரின் வயர் அவிழ்ந்து மாணவனின் உடலில் பட்டதில் மின்சாரம் தாக்கி குறித்த மாணவன் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கலேன்பிந்துனுவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share:

Related Articles