NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மின் கட்டணம் செலுத்த புதிய நிபந்தனை..!

மின்சார சபை அலுவலகத்தில் நேரடியாக மின் கட்டணம் செலுத்த பொதுமக்களுக்கு புதிய நிபந்தனை விதித்து, தமிழ்நாடு மின்சார சபை அறிவித்துள்ளது.

ரூ.4000க்கும் அதிகமான மின் கட்டணத்தை மின்சார சபை அலுவலகத்தில் இனி நேரடியாக செலுத்த முடியாது என்றும், ரூ.4000க்கும் அதிகமான மின் கட்டணத்தை இனி இணையத்தின் மூலமாக மட்டுமே செலுத்த முடியும் என்றும் மின்சார சபை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், எதிர்வரும் மாதங்களில் ரூ.3000, ரூ.2000 என மின்சார சபை அலுவலகத்தில் செலுத்துவதற்கான அதிகபட்ச தொகை படிப்படியாக குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles