NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பான யோசனை முன்வைப்பு!

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

குறித்த யோசனை தொடர்பில் அமைச்சரவை வழங்கும் தீர்மானத்தின் பின்னர் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படுமென பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு அமைச்சரவைப் பத்திரமொன்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால், அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவித்துள்ளார். 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles