NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மெக்ஸிகோவின் வெப்ப அலை – செத்து மடியும் உயிரினங்கள்!

மெக்ஸிகோவின் வெப்ப அலை மற்றும் வறட்சி காரணமாக பல உயிரினங்கள் பரிதாபகரமாக உயிரிழக்கின்றன.

இதனடிப்படையில், வடக்கு மாகாணமான சிஹுவாஹுவாவில் உள்ள புஸ்டிலோஸ் தடாகத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மடிந்துள்ளன.

அதிக வெப்பம் காரணமாக இவ்வாறு மீன்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த பகுதியில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வறட்சியான காலநிலையுடன் குளத்தின் நீர்மட்டமும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்து கரையொதுங்கும் மீன்களை சுகாதார பிரிவினர் பாதுகாப்பாக முறையில் கிருமிநாசினிகள் தெளித்து அப்புறப்படுத்தி வருததையும் புகைப்படங்களின் வாயிலாக காணக்கூடியதாக இருந்தது.

Share:

Related Articles