NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாகி சூறாவளியால் மியன்மாரில் இதுவரை 220 பேர் உயிரிழப்பு..!

யாகி சூறாவளி காரணமாக மியன்மாரில் இதுவரை 220 பேர்வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் 80 பேர்வரை தேடப்பட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் சூறாவளியின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தற்போது குறித்த பகுதியில் உள்ள மக்கள் உணவு, தண்ணீர் மற்றும் வசிப்பிடமின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Share:

Related Articles