NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாகி புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 141ஆக அதிகரிப்பு..!

யாகி (Yagi) புயல் காரணமாக வியட்நாமில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 54 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 30 ஆண்டுகளில் வியட்நாமை தாக்கிய மிக மோசமான புயல் இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட இந்த புயல் காரணமாக வியட்நாமில் 1.5 மில்லியன் மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

Share:

Related Articles