NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழில் கூரிய ஆயுதங்களுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் – சுன்னாகம் ஈவினைப் பகுதியில் கூரிய ஆயுதங்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு சொந்தமான வீட்டில் வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சோதனை நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டது.முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கைது நடவடிக்கையானது யாழ்ப்பாணம் பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்றைய தினம் (7) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, எட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சம்பவம் தொடர்பாக கைதான சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேகநபர் பல்வேறுபட்ட வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் குறித்த விடயத்தில் வெளிநாட்டு பிரஜைக்கும் தொடர்புள்ளதா அல்லது வேறு நபர்களுக்கு தொடர்புள்ளதா என சந்தேகிப்பதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles