NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு தாக்குதல் ஒருவர் காயம்!

யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் நிலையத்தின் முன்பாக உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

பொலிஸ் நிலையத்திற்கு எதிரே உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வேலை செய்யும் நபர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகத்தில் ஒரு இளைஞனை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:

Related Articles