NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழ்ப்பாண வைத்தியசாலை சேவைகள் வழமைக்கு திரும்பியது..!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற தொழிற்சங்க நடவடிக்கை பொதுமக்கள் நலன் கருதி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தளர்த்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவசர சிகிச்சை தவிர்ந்த ஏனைய சிகிச்சைகளை இடைநிறுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வியாழக்கிழமை முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் அரச வைத்திய அதிகாரிகளின் தாய்ச் சங்கத்துடன் யாழ் போதனா வைத்தியசாலைக் கிளைச் சங்கம் தற்போதைய நிலைமை பற்றிக் கலந்துரையாடிய பின்னர், நேற்றுக் காலை பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இதன்போது, தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு நேற்று கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளிகளின் பாதுகாப்பை முன்னுறுத்தி, கலந்துரையாடலின் போது பணிப்பாளரினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஒரு வாரத்திற்குள் நடைமுறைப்படுத்தத் தவறும் பட்சத்தில் முன்னறிவிப்பின்றி முழு அளவில் தமது தொழிற்சங்க நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, யாழ் போதனா வைத்தியசாலையில் கிளினிக்குகள், வெளி நோயாளர் பிரிவு மற்றும் பிற சேவைகள் இன்று மாலை 4 மணி முதல் வழமை போல் செயற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles