யோஷித்த ராஜபக்சவின் பாட்டி டெய்வி பொரெஸ்ட் விக்கிரமசிங்கவிற்கு கடுவலை நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடையை விதித்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யோஷித ராஜபக்ஷ டெய்சிபெரெஸ்ட் இருவருடைய பெயரிலும் வங்கியில் காணப்பட்ட 59 மில்லியன் ரூபாய் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள பொலிஸ் ஊடக பேச்சாளர் இந்த பணம் குறித்த விபரங்களை யோஷித ராஜபக்ஷ வெளியிடதவறிவிட்டார் எனவும் தெரிவித்துள்ளனர்.