NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வீதி விபத்துகள் குறைந்துள்ளதாக தகவல்…!

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் வீதி விபத்துக்கள் குறைவடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2023 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 735 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும் இதில் ஆயிரத்து 202 பேர் உயிரிழந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி, நாளொன்றில் 7 பேர் வீதி விபத்து காரணமாக உயிரிழப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2019 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலப்பகுதியில் வீதி விபத்துகள் காரணமாக மூவாயிரம் உயிரிழப்புகள் பதிவாகியிருந்ததாகவும், தற்போது அந்த தொகை வீழ்ச்சியடைந்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ கூறியுள்ளார்.

Share:

Related Articles