NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் ஒருவர் கைது…!

பதுளை கிரந்துருகோட்டை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ஹிட்டிய கிரந்துருகோட்டை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய மீனவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நபர் ஒருவர் கைக்குண்டு வைத்திருப்பதாக கிரந்துருகோட்டை காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்ட போது கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Share:

Related Articles