NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

1000 இற்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல்…!

அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணம், நீர்க்கட்டணம் மற்றும் வற் எனப்படும் பெறுமதி சேர் வரி காரணமாக நாடாளாவிய ரீதியில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான பேக்கரி உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.

பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே ஜயவர்தன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரித்துள்ளமை, முட்டை விலை அதிகரிப்பு மற்றும் வெதுப்பக உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்வதில் இருந்து அதிகளவான நுகர்வோர்கள் விளகியுள்ளனர்.

இதன் காரணமாக பேக்கரி உற்பத்தி தொழிற்துறை பின்னடைவைச் சந்தித்துள்ளதாக பேக்கரி உற்பத்தி நிறுவனங்களின் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles